எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை உயர்த்திய போது நிதிச்சுமை இல்லையா?: அரசுக்கு தமிழிசை கேள்வி
பேருந்து கட்டணத்தை உயர்த்தும் போது இருந்த நிதிச்சுமை, எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை உயர்த்தும் போது இல்லையா? என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மற்ற மாநிலங்களுடன் பேருந்து கட்டணத்தை ஒப்பிடும் அரசு, தொழில் வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாதது ஏன்?. எந்தவித முன் அறிவிப்புயின்றி பேருந்து கட்டணத்தை உயர்த்தியதால் பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர். நிதி நெருக்கடியை சுட்டிக்காட்டும் அரசு சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதியம் உயர்வு செய்த போது ,அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படவில்லையா? போக்குவரத்துதுறை அமைச்சர் கட்டணம் குறைப்புக்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறுகிறார். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வரும் 24 ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம், அதற்கு முன் கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும்” என கூறீனார்