\
எதிர்க்கட்சித்தலைவரா? துணை நிலை ஆளுநரா? கிரண்பேடிக்கு நாராயணசாமி கேள்வி

எதிர்க்கட்சித்தலைவரா? துணை நிலை ஆளுநரா? கிரண்பேடிக்கு நாராயணசாமி கேள்வி

எதிர்க்கட்சித்தலைவரா? துணை நிலை ஆளுநரா? கிரண்பேடிக்கு நாராயணசாமி கேள்வி
Published on

புதுச்சேரியில் எதிர்கட்சி தலைவர் போன்று ஆளுநர் செயல்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, பாஜகவை சேர்ந்த மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரம் தொடர்பாக ஆளுநர் கிரண்பேடியின் கருத்துக்கள் மற்றும் அறிக்கைகள் மாநில அரசுக்கு எதிராகவே உள்ளது. தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செயல்பாடுகளை கிரண்பேடி செய்துவருகிறார். 

இதுதொடர்பாக அவருக்கு 15 முறை கடிதம் எழுதியும் அதை பொருட்படுத்தாமல் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு குழப்பம் விளைக்கின்றார். 2018 ல் புதுச்சேரியில் அதிகார மாற்றம் வரும் என்று கிரண்பேடி கூறுவதன் மூலம் அவர் எதிர்க்கட்சி தலைவர்போல் செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com