ஐபிஎல் இறுதிபோட்டி: ரோகித் சர்மாவுக்காக காத்திருக்கும் மூன்று சாதனைகள்

ஐபிஎல் இறுதிபோட்டி: ரோகித் சர்மாவுக்காக காத்திருக்கும் மூன்று சாதனைகள்
ஐபிஎல் இறுதிபோட்டி: ரோகித் சர்மாவுக்காக காத்திருக்கும் மூன்று சாதனைகள்

ஐபிஎல் 2020 இன் இறுதி போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் மூலமாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்காக மூன்று சாதனைகள் காத்திருக்கின்றன.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் இறுதி போட்டியை ஐபிஎல் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரோகித் சர்மா, தற்போது ஐபிஎல்-ல் மும்பை அணியின் கேப்டனாக உள்ளார். இந்த ஐபிஎல் இறுதி போட்டி மூலமாக அவருக்காக காத்திருக்கும் மூன்று சாதனைகள்.

  • ஏற்கெனவே மும்பை அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது, அதில் 4 போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக இருந்துள்ளார். இம்முறை மும்பை அணி கோப்பையை வென்றால் அது மும்பை அணி வெல்லும் 5வது கோப்பையாக இருக்கும்.
  • ரோகித் சர்மா இதுவரை 199 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார், வரும் இறுதிபோட்டியில் விளையாடுவதன் மூலமாக 200 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெறுவார். தோனி இதுவரை 204 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
  • ரோகித் சர்மா இந்த போட்டியில் 8 ரன்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையை செய்வார். ஏற்கெனவே தோனி, கோலி 4 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையை செய்துள்ளனர்.
  • ரோகித்சர்மா இன்னும் 43 ரன்களை எடுத்தால் ஐபிஎல் கேப்டனாக இருந்து 3 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெறுவார். ஏற்கெனவே இந்த சாதனையை தோனி, கோலி, காம்பீர் ஆகியோர் செய்துள்ளனர்.

ரோகித் சர்மா இந்த ஐபிஎல் சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், இவர் இந்த சீசனில் இரண்டு அரைசதங்களை மட்டுமே அடித்து மொத்தமாக 264 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடைசி மூன்று போட்டிகள் அவர் முறையே 9,4,0 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது மும்பை ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com