ஐபிஎல்: அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகள்.. சிக்ஸர் மழை பொழிந்து அணியை மீட்ட ரஸல்!

ஐபிஎல்: அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகள்.. சிக்ஸர் மழை பொழிந்து அணியை மீட்ட ரஸல்!
ஐபிஎல்: அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகள்.. சிக்ஸர் மழை பொழிந்து அணியை மீட்ட ரஸல்!

சுலபமான இலக்கை நோக்கி ஆடி வரும் நிலையிலும், அடுத்தடுத்த விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்து திணறி வருகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 8-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார் கொல்கத்தா நைட் ரைடரஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர். ஷிகர் தவானுடன் ஓப்பனிங் இறங்கிய பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வாலுக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. உமேஷ் யாதவ் வேகப்பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய பனுகா ராஜபக்‌ஷே 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என வான வேடிக்கை காட்டி 31 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்தவர்களும் 20 ரன்கள் கூட எடுக்காமல் பெவிலியனுக்கு “பேஷன் ஷோ” காட்டியதால் ரன் ரேட் “6”ஐ தொட்டவாறே பயணித்தது. லியாம் லிவிங்ஸ்டன் 19 ரன்களிலும், ராஜ் பாவா 11 ரன்களிலும் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாரூக் கான், ஓடியன் ஸ்மித் டக் அவுட்டாக பஞ்சாப்பின் ஸ்கோர் ஊசலாட துவங்கியது. இறுதியாக பவுலிங்கில் தாக்கத்தை ஏற்படுத்த கொண்டுவரப்பட்ட ரபாடா, பேட்டிங்கில் கலக்கத் துவங்கினார். 4 பவுண்டரிகள் விளாசி 25 ரன்கள் விளாசிய நிலையில் அவரும் அவுட் ஆனார். அடுத்து வந்தவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்ட 18.2 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது. 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார் உமேஷ் யாதவ்.

இடைவேளைக்கு பிறகு 138 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. ரபாடா பந்துவீச்சில் 12 ரன்கள் விளாசி எப்போதும் போல அவுட்டானார் அஜிங்யா ரஹானே. வெங்கடேஷ் அய்யரும் ரன் சேர்க்க திணறி 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 5 பவுண்டரிகள் விளாசி அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். தொடர்ந்து சில டாட் பால்கள் தந்த பிரஷரில் மட்டையை சுழற்ற, பந்து எட்ஜ் ஆகி ரபாடா கையில் கேட்ச் ஆனது. நிதிஷ் ரானாவும் அவுட் ஆக, அடுத்து வந்த ரஸலும் சாம் பில்லிங்ஸும் தொடக்கத்தில் பொறுமையாக விளையாடினர். சில பந்துகளை கடந்த பின்னர் ரஸல் தன்னுடைய அதிரடியை காட்டத் தொடங்கினார்.

சிக்ஸர் மழை பொழிந்தார். குறிப்பாக ஓடன் ஸ்மித் வீசிய 12வது ஓவரில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி தள்ளினார். 14 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 36 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே தேவை. அதனால், வெற்றி பெற கொல்கத்தாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ரஸல் 26 பந்துகளில் அரைசதமும் கடந்தார். 29 பந்துகளில் 58 ரன்கள் குவித்து இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com