லஞ்சம் கேட்டு மிரட்டியதால் தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டன: துரைமுருகன் குற்றச்சாட்டு

லஞ்சம் கேட்டு மிரட்டியதால் தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டன: துரைமுருகன் குற்றச்சாட்டு

லஞ்சம் கேட்டு மிரட்டியதால் தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டன: துரைமுருகன் குற்றச்சாட்டு
Published on

அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் லஞ்சம் கேட்டு மிரட்டியதால் தமிழகத்தில் இருந்த தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டன என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவை வைர விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், திமுக ஆட்சியில் 40 அணைகள் கட்டி உள்ளோம். சென்னையில் மட்டும் 27 மேம்பாலங்கள் கட்டியுள்ளோம். இதற்கெல்லாம் தற்போது உள்ள அரசு, தகுதியற்ற அரசாக உள்ளது. நாங்கள் தொழிற்சாலைகள் கொண்டுவந்தோம். தற்போது உள்ள அரசின் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் லஞ்சம் கேட்டு மிரட்டுவதால் அனைத்து தொழிற்சாலைகளும் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிட்டன. சென்னை துறைமுகத்தில் இறக்கப்படும் நிலக்கரிகளுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கி 6 ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தடையை நீக்க இதுவரை இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com