இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி தேர்தலில் போட்டியில்லை - அர்ஜுன மூர்த்தி

இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி தேர்தலில் போட்டியில்லை - அர்ஜுன மூர்த்தி
இந்திய மக்கள் முன்னேற்றக்  கட்சி தேர்தலில் போட்டியில்லை - அர்ஜுன மூர்த்தி

ரஜினியின் நண்பர் அர்ஜுன மூர்த்தியின் கட்சி, இந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை.

அண்மையில் ரஜினிகாந்த கட்சி தொடங்குவதாகக்கூறி அதன் பொறுப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டார். பின்னர் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என ரஜினி கூறியதால் அர்ஜுன மூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதைத்தொடர்ந்து அந்த கட்சி ரோபோ சின்னத்தில் போட்டியிடுவதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் முழுமையான களப்பணியாற்ற முடியாததால் தேர்தலில் போட்டியில்லை என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com