திருச்சி, திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு - வாக்குப்பதிவு தாமதம்‌

திருச்சி, திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு - வாக்குப்பதிவு தாமதம்‌
திருச்சி, திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு - வாக்குப்பதிவு தாமதம்‌

திருச்சி, திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புதிய இயந்திரம் பொருத்தும் பணியால் வாக்குப்பதிவு துவங்குவதில் தாமதம்‌ ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி 42வது வார்டு பார்ப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 406-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக  வாக்குப்பதிவு துவங்கவில்லை. புதிய இயந்திரம் கொண்டுவரப்பட்டு பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல், திருச்சி மாநகராட்சி 23 வது வார்டுக்குட்பட்ட கலைப் பள்ளி மானிய துவக்கப்பள்ளியில் அமைந்துள்ள 281-வது வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது.

இதையும் படிக்க: கோவை: கைது செய்யப்பட்ட எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் விடுவிப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com