புஷ்கர விழாவில் புனித நீராடினார் முதலமைச்சர் பழனிசாமி

புஷ்கர விழாவில் புனித நீராடினார் முதலமைச்சர் பழனிசாமி

புஷ்கர விழாவில் புனித நீராடினார் முதலமைச்சர் பழனிசாமி
Published on

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கர விழாவில் முதலமைச்சர் பழனிசாமி புனித நீராடினார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகாபுஷ்கரம் விழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 24-ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் பழனிசாமி, மகா புஷ்கர விழாவில் புனித நீராடினார். அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் புஷ்கர விழாவில் புனித நீராடினர். 

முதலமைச்சர் வருகையையொட்டி, ஐஜி, டிஐஜிக்கள் தலைமையில் சுமார் 5 ஆயிரம் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனையடுத்து, நாகையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com