தமிழ்நாட்டை போல் கர்நாடகாவிலும் 70 சதவீத இடஒதுக்கீடு: சித்தராமையா

தமிழ்நாட்டை போல் கர்நாடகாவிலும் 70 சதவீத இடஒதுக்கீடு: சித்தராமையா
தமிழ்நாட்டை போல் கர்நாடகாவிலும் 70 சதவீத இடஒதுக்கீடு: சித்தராமையா

கர்நாடகத்தில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 70 சதவீம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியல்சட்டத்தை திருத்தக் கோரிக்கை வைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்..

பெங்களூருவில் சட்டசபை வளாகத்தில் வால்மீகி ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சித்தராமையா 12 அடி உயர வால்மீகி சிலையை திறந்து வைத்தார். பின்பு பேசிய சித்தராமையா, இடஒதுக்கீடு என்பது 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்கு மாறாக தமிழ்நாடு அரசு 69 சதவீதம் வரை இடஒதுக்கீட்டை அளித்துள்ளது. இதேபாணியில் கர்நாடக அரசும் 50 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து 70 சதவீதமாக உயர்த்த அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு போதிய வாய்ப்பு  கிடைக்கவில்லை என்று கூறிய அவர் இதை மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக கூறவில்லை என்றும் கூறினார். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக பொருளாதார ரீதியிலான சர்வே ஒன்றை நடத்தியிருக்கிறது. அந்த சர்வேவின் அடிப்படையில் கர்நாடக அரசு இடஒதக்கீட்டை 70 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் நலத்திட்டங்களுக்கு கர்நாடக அரசு 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் சித்தராமையா கூறினார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com