மோடி வருகைக்காக இடிக்கப்பட்ட ஐஐடி வளாக சுவர்

மோடி வருகைக்காக இடிக்கப்பட்ட ஐஐடி வளாக சுவர்
மோடி வருகைக்காக இடிக்கப்பட்ட ஐஐடி வளாக சுவர்

பிரதமர் மோடியின் சென்னை பயணத்திற்காக கிண்டியில் ‌உள்ள ஐஐடி வளாக சுற்றுசுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தை பகுதியில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை பார்வையிடவும், அடையாறில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் பிரதமர் மோடி வரும் 12ம் தேதி சென்னை வரவுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராணுவ கண்காட்சி நடைபெறும் திருவிடந்தை பகுதிக்கு செல்கிறார். 

பின்னர் அங்கிருந்து ஹெலிக்காப்டர் மூலம், கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்திற்கு வருகிறார். அதைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக அடையாறு செல்லும் பிரதமர், மீண்டும் ஐஐடிக்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் செல்கிறார். இதனால் ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்காக‌ ஐஐடி வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஐஐடி வளாகத்தில் உள்ள ஒரு பகுதியின் சுற்றுசுவர் இடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையின் போது அசம்பாவிதங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காக, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com