“எங்கள் சிலீப்பர் செல்கள் அமைச்சர்களாகவே இருக்கிறார்கள்” - வெற்றிவேல்

“எங்கள் சிலீப்பர் செல்கள் அமைச்சர்களாகவே இருக்கிறார்கள்” - வெற்றிவேல்
“எங்கள் சிலீப்பர் செல்கள் அமைச்சர்களாகவே இருக்கிறார்கள்” - வெற்றிவேல்

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டாலும் நீதிமன்றம் செல்லாமல், தேர்தலையே சந்திப்போம் என வெற்றிவேல் தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி ஆகியோர், டிடிவி தினகரன் கட்சியில் பொறுப்பு வகிப்பதாக கூறி அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் மனு அளித்தார். அதில், எம்.எல்.ஏக்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க கொறடா வலியுறுத்தியிருந்தார். இதனிடையே தாங்கள் இன்னும் அதிமுகவில்தான் இருப்பதாக 3 எம்எல்ஏக்களும் கூறியுள்ளனர். கொறடா உத்தரவின்படியே செயல்படுவோம் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை அடையாறிலுள்ள டிடிவி தினகரன் இல்லத்தில், அவரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த வெற்றிவேல், எம்.எல்.ஏக்கள் 3 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டாலும் நீதிமன்றம் செல்லாமல், தேர்தலையே சந்திப்போம் எனக் கூறியுள்ளார். 

மேலும் வெற்றிவேல் பேசுகையில், “இன்னும் எங்கள் சிலீப்பர் செல்கள் அதிமுகவிலிருந்து கொண்டிருக்கிறார்கள். 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற பின்னர் அவர்களை வைத்து ஆட்சியை பிடிப்போம். 3 எம்.எல்.ஏக்களை தாண்டி பலர் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஏன் அமைச்சர்களாகவே எங்கள் சிலீப்பர் செல்கள் இருக்கிறார்கள். 

3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சட்டப்பாதுகாப்பு உள்ளது. 3 பேரும் அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள். அமமுகவில் உள்ள ஒரே எம்.எல்.ஏ. தினகரன் மட்டுமே. எம்.எல்.ஏக்கள் 3 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டாலும் நீதிமன்றம் செல்லாமல், தேர்தலையே சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com