ஐதராபாத்: கையில் பாம்புடன் மாநகராட்சி அலுவலகம் சென்ற நபர்! வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஐதராபாத்தைச் சோந்த ஒருவர், மாநகராட்சி அலுவலகத்திற்கு பாம்புடன் சென்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ஐதராபாத் மாநகராட்சி பகுதியில் வசித்து வருபவர் சம்பத்குமார். தொடர் மழையின் காரணமாக இவரது வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. அதில் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வீட்டிற்குள் வந்துள்ளன. இது குறித்து மாநகராட்சிக்கு அவர் புகார் செய்துள்ளார்.

ஆனால், 6 மணி நேரத்திற்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொறுமையிழந்த சம்பத்குமார், பாம்பை கையில் எடுத்துக்கொண்டு, மாநகராட்சி வார்டு அலுவலகம் சென்றுள்ளார். அங்கு மேஜையில் பாம்பை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவை, கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com