மதுபான பாட்டில்களில் சாய்பாபா சிலைக்கு தேன் அபிஷேகம்! #ViralVideo

ஆந்திர மாநிலத்தில் சாய்பாபா சிலைக்கு மதுபான பாட்டில்களில் தேனை நிரப்பி அபிஷேகம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குரு பௌர்ணமியை ஒட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டம் அச்சண்டவேமாவரம் கிராமத்தில் உள்ள சாய்பாபா கோயிலிலும் வழிபாடுகள் நடைபெற்றன. அப்போது சிலர் மது பாட்டில்களில் தேன் நிரப்பி சாய்பாபாவின் சிலைக்கு அபிஷேகம் செய்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இச்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அதை காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com