தொடர் கனமழை: குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு.!

தொடர் கனமழை: குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு.!

தொடர் கனமழை: குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு.!
Published on

கன மழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. அதேபோல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.


இதனால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா நோய் பரவல் காரணமாக யாரும் குளிக்க அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com