வெப் சீரிஸ் மோகத்தால் நாட்டு துப்பாக்கியுடன் உலா வந்த சிறுவன்.. குஜராத் போலீஸ் அதிரடி!

வெப் சீரிஸ் மோகத்தால் நாட்டு துப்பாக்கியுடன் உலா வந்த சிறுவன்.. குஜராத் போலீஸ் அதிரடி!
வெப் சீரிஸ் மோகத்தால் நாட்டு துப்பாக்கியுடன் உலா வந்த சிறுவன்.. குஜராத் போலீஸ் அதிரடி!

துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக குஜராத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

சூரத் நகரின் பந்தேசாரா பகுதியை சேர்ந்த அந்த 14 வயது சிறுவன், குற்றப்பின்னணியை கொண்ட வெப் சீரிஸ் பார்த்து அடிமையானதால் அதில் வருவதை போலவே துப்பாக்கி பயன்படுத்த எண்ணி தற்போது சிக்கலில் சிக்கியிருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த வெப் சீரிஸ் வரும் ஹீரோ ஆயுதம் ஏந்திய வீரனாக நடித்திருந்தது சிறுவனை கவர்ந்ததால் அந்த ஹீரோவை போல தானும் துப்பாக்கி பயன்படுத்த வேண்டும் என எண்ணி உத்தர பிரதேசத்தில் உள்ள ராஜா என்ற டீலரிடம் 6,000 ரூபாய் கொடுத்து நாட்டு துப்பாக்கியை வாங்கியிருக்கிறார்.

அந்த கன்னை வைத்துக் கொண்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களையும் தனது நண்பர்களையும் கவரமும், பயமுறுத்தவும் செய்திருக்கிறார். இதனை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்டு அந்த சிறுவனை கைது செய்து சிறுவனிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட அந்த சிறுவன் மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறார் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்பட்டிருக்கிறார். அங்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, சிறுவன் சிறார் இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com