மனைவியை கண்டதும் கல்யாணத்தில் இருந்து தப்பி ஓடிய மணமகன்.. ஏன் தெரியுமா?

மனைவியை கண்டதும் கல்யாணத்தில் இருந்து தப்பி ஓடிய மணமகன்.. ஏன் தெரியுமா?
மனைவியை கண்டதும் கல்யாணத்தில் இருந்து தப்பி ஓடிய மணமகன்.. ஏன் தெரியுமா?

(கோப்பு புகைப்படம்)

முதல் கல்யாணத்தை மறைத்து அல்லது முதல் மனைவிக்கு தெரியாமல் இன்னொரு கல்யாணம் செய்துக் கொள்வது என பல சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ஐதராபாத்தில் நடந்த தன்னுடைய இரண்டாவது கல்யாணத்தின்போது அந்த மணமகன் மண்டபத்தை விட்டே ஓட்டம் பிடித்திருக்கிறார்.

அதன்படி, சையது நசீர் என்பவர் அவரது முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது கல்யாணம் செய்ய முனைந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 4ம் தேதி இதற்காக திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்தியிருக்கிறார். அப்போது திருமண மண்டபத்திற்குள் போலீசாருடன் சையதின் முதல் மனைவியான டாக்டர் சனா சம்ரீன் நுழைந்திருக்கிறார். இதனைக்கண்ட சையது மண்டபத்தின் பின் வாசல் வழியாக அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசியுள்ள சம்ரீனின் சகோதரர் அப்துல் வஹீது கூறியதாவது, “கடந்த 2019ம் ஆண்டு சையது நியூசிலாந்தில் இருந்து வந்த போது என்னுடைய சகோதரி சனா சம்ரீனை திருமணம் செய்துக் கொண்டார். அதன் பிறகு கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் அவர் இங்கேயே இருந்துவிட்டார்.

சையதுக்கான அனைத்து செலவினங்களையும் என் சகோதரி சம்ரீன்தான் பார்த்துக் கொண்டார். இதுபோக அவரது உறவினர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டபோதும் சம்ரீன் தான் மருத்துவம் பார்த்தார். இவ்வளவு செய்தும் மேலும் 15 லட்சம் பணம் வேண்டும் என கேட்டிருக்கிறார். அதற்கு முடியாது என்றது சம்ரீனை விட்டு பிரிந்து விட்டார்.” எனக் கூறியிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து பேசியுள்ள சம்ரீன், “எனக்கு 22 மாதத்தில் ஒரு பையன் இருப்பதாகவும், பணம் கேட்டு அடிக்கடி என்னிடம் தகராறு செய்வதையே சையது வேலையாக கொண்டிருந்தார். எனக்கு தெரியாமலேயே இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள நினைத்திருக்கிறார். அதனால்தான் போலீசுடன் வந்தேன்.” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com