பேருந்தில் மக்களோடு மக்களாக பயணம் செய்த ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன்!

பேருந்தில் மக்களோடு மக்களாக பயணம் செய்த ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன்!
பேருந்தில் மக்களோடு மக்களாக பயணம் செய்த ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன்!

புதுச்சேரியில் மக்களோடு மக்களாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்திராஜன் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி மாற்றப்பட்டு புதிய துணைநிலை ஆளுநராக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திராஜனிடம் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. பொறுப்பேற்றவுடனேயே ஆக்கப்பூர்வமான அதிரடி ஆளுநராய் செயல்பட்டு மக்களிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறார், தமிழிசை செளந்திராஜன். புதுச்சேரியில் இதுவரை அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முட்டைதான் வழங்கப்பட்டு வந்தது. இன்னும் குழந்தைகளுக்கு புரதச்சத்தை அதிகரிக்க புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களிலும் அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று முட்டைகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு மக்களின் மனங்களை வென்றிருக்கிறார். 

இன்னும் குழந்தைகளுக்கு புரதச்சத்தை அதிகரிக்க புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களிலும் அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று முட்டைகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு மக்களின் மனங்களை வென்றிருக்கிறார். இதற்காக, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அதேபோல, சமீபத்தில் காரைக்காலில் ஏற்பட்ட வெள்ளப் பகுதிகளை சேற்றிலும் மழைநீரிலும் நடந்தே சென்று பார்வையிட்டு உடனடி நடவடிக்கைகள் எடுத்தார்.

தற்போது, புதுச்சேரியில் தவளக்குப்பத்தில் மக்களோடு மக்களாக பேருந்தில் அமர்ந்து பயணம் செய்து அவர்களின் குறைகளை கேட்கும் வீடியோ சமூக வளைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com