டெங்கு காய்ச்சல் உயிரிழப்புக்கு அரசு மட்டுமே காரணம் அல்ல: மைத்ரேயன்

டெங்கு காய்ச்சல் உயிரிழப்புக்கு அரசு மட்டுமே காரணம் அல்ல: மைத்ரேயன்

டெங்கு காய்ச்சல் உயிரிழப்புக்கு அரசு மட்டுமே காரணம் அல்ல: மைத்ரேயன்
Published on

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் உயிரிழப்புக்கு அரசு மட்டுமே காரணம் அல்ல என அதிமுக எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வாழ்த்துக் கூறிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், " தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது என்பதை மருத்துவர் என்கிற முறையில் நானும் ஏற்றுக்கொள்கிறேன். இதுகுறித்து சுகாதாரத்துறை தேவையான ஆலோசனைகள், முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. உயிரிழப்புகள் நிச்சயமாக வருத்தத்திற்குரியது. வேதனையில் பங்கேற்கிறோம். ஆனால் அந்த உயிரிழப்புகள் தமிழக அரசால் தான் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. டெங்குவை கட்டுப்பட்டுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்றார்.

மேலும் உண்மையான அதிமுக யார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மைத்ரேயன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com