‘புகழேந்தி ஜெயிலுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கட்டும்’: ஆறுக்குட்டி கடும் விமர்சனம்

‘புகழேந்தி ஜெயிலுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கட்டும்’: ஆறுக்குட்டி கடும் விமர்சனம்
‘புகழேந்தி ஜெயிலுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கட்டும்’: ஆறுக்குட்டி கடும் விமர்சனம்

பெங்களூரு சிறைச்சாலையில் உள்ள சசிகலாவுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கும் வேலையை மட்டும் புகழேந்தி பார்க்கட்டும் என்கிற ரீதியில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, “சசிகலா குடும்பத்துக்கு அதிமுகவில் இனி இடமில்லை. நாஞ்சில் சம்பத்தும், அதிமுகவின் கர்நாடக மாநிலப் பொறுப்பாளர் புகழேந்தியும் தேவையில்லாமல் பேசி வருகின்றனர். இருவரும் பிரச்னையை பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இருக்கும் நேரத்தில் இதுபோன்ற பேச்சுகள் தேவையற்றது” என்று கூறினார்.

மேலும், “தமிழ்நாட்டில் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் அவர் செய்தால் போதும். இல்லையென்றால் கர்நாடகாவுக்கு சென்று, அங்கு ஜெயிலுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கும் வேலையை மட்டும் பார்க்கட்டும்” என்றும் ஆறுக்குட்டி பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com