மதுரை : பிறந்து 4 நாட்களான குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு

மதுரை : பிறந்து 4 நாட்களான குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு
மதுரை : பிறந்து 4 நாட்களான குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு

மதுரையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கொரோனா வைரஸால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரையில் பிறந்து குழந்தை ஒன்று ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 29ஆம் தேதி பிறந்ததிலிருந்து சிகிச்சைப் பெற்று வந்த அந்தக் குழந்தை, 2ஆம் தேதி சுவாசக் கோளாறு காரணமாக இறந்தது உறுதியானது.

இந்நிலையில் தற்போது அந்தக் குழந்தை கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது. பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கொரோனாவால் உயிரிந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com