முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்

முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்
முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்   கே.சி.பழனிசாமி அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் கொள்கைகளுக்கும், குறிக்கோளுக்கும் முரண்பாடான வகையில் செயல்பட்டால் நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் உறுப்பினர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கப்போம் என்று கே.சி.பழனிசாமி கூறியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கே.சி.பழனிசாமி அதிமுகவில் செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com