திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாரடைப்பால் காலமானார்
கடையநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நைனா முகம்மது மாரடைப்பால் இன்று காலமானார்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதியில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நைனா முகம்மது. அதனைத்தொடர்ந்து 2001ம் ஆண்டு திமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் சுமார் 17 ஆண்டுகள் அதிமுகவின் மாவட்ட சிறுபான்மை பிரிவு மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார்
சமீபத்தில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., திட்டங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அதிமுக வாக்களித்ததை கண்டித்து அதிமுகவில் இருந்து வெளியேறினார்
இந்நிலையில் இன்று காலை 4 மணி அளவில் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது வீட்டிலிருந்து தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் அங்கிருந்து திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸில் ஏறியதும் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.