தீபாவளி பண்டிகை: பூக்கள் விலை கடும் உயர்வு!

தீபாவளி பண்டிகை: பூக்கள் விலை கடும் உயர்வு!
தீபாவளி பண்டிகை: பூக்கள் விலை கடும் உயர்வு!

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை ரூ. 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தேவை அதிகரித்து பூக்கள் வரத்து குறைவானதால் பூக்களின் விலை 7 மடங்கு உயர்ந்துள்ளது.


மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு மொத்தம் மற்றும் சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தொடர் மழை காரணமாக பூக்கள் வரத்து வழக்கத்தை விட குறைவாக உள்ளதாலும் தீபாவளி பண்டிகைக்காக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வழக்கமாக 80 முதல் 90 டன் வரை பூக்கள் வரத்து இருந்து வந்த நிலையில் தற்பொழுது 50டன் பூக்கள் மட்டுமே வருகிறது. இதனால் பூக்களின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் 7 மடங்கு உயர்ந்துள்ளது.


கடந்த வாரம் 240 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ விலை 7 மடங்கு அதிகரித்து இன்று 2000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 200 ரூபாய்க்கு விற்பனையான முல்லை பூ 1700 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்பனையான பிச்சி பூ 650 ரூபாய்க்கும் 25 ரூபாய்க்கு விற்பனையான சம்மங்கி பூ 250 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் 1700 ரூபாய்க்கும், கோழிகொண்டை 100 ரூபாய்க்கும் செவ்வந்தி 350 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 350 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 250 ரூபாய்க்கும், கேந்தி பூ 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com