முதலமைச்சருடன் மீனவப் பிரதிநிதிகள் சந்திப்பு

முதலமைச்சருடன் மீனவப் பிரதிநிதிகள் சந்திப்பு
முதலமைச்சருடன் மீனவப் பிரதிநிதிகள் சந்திப்பு

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த மீனவ பிரதிநிதிகள், காணாமல் போன மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.

ஒகி புயல் நேரத்தில் காணாமல் போன ஆயிரக்கணக்கான மீனவர்களை மீட்கக்கோரி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நேற்று 12 மணி நேரத்திற்கும் மேலாக மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதேபோல், காணாமல் போன குமரி மாவட்ட மீனவர்களை மீட்கக்கோரி சென்னை நொச்சிக்குப்பத்திலும் மீனவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். மீனவர்கள் முழுமையாக மீட்கப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையல் கன்னியாகுமரி மற்றும் சென்னையை சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளனர். சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது ஒகி புயலின் போது காணாமல் போன மீனவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி முதலமைச்சரிடம் மீனவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com