தேர்தல் பணி: முன்னாள் காவலர்கள், சிறைத் துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு அழைப்பு

தேர்தல் பணி: முன்னாள் காவலர்கள், சிறைத் துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு அழைப்பு
தேர்தல் பணி: முன்னாள் காவலர்கள், சிறைத் துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு அழைப்பு

தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சிறைத்துறையினருக்கு தமிழக காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

வரும் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவையொட்டி, பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சிறைத்துறையினர், விண்ணப்பிக்கலாம் என்று தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் அறிவித்துள்ளது. இவர்கள் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல், 7-ந் தேதிவரை 4 நாட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணியில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்கு 30 ஆயிரம் பேர் வரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com