பொதுச் செயலாளரை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்

பொதுச் செயலாளரை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்

பொதுச் செயலாளரை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்
Published on

கட்சியின் பொதுச் செயலாளரை மாற்றவோ, நீக்கவோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது என தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய அவர், " புரட்சித் தலைவி அம்மா அணி, தற்போது அம்மா அணியில் வந்து இணைந்துவிட்டார்கள். இப்போது நாங்கள் தான் உண்மையான அதிமுக. எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா. துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் வாபஸ் பெற்றால் கூட இரட்டை இலை சின்னம் அதுவாகவே எங்களுக்கு வந்துவிடும். ஏனென்றால் சசிகலாதான் பொதுச் செயலாளர். டிடிவி தினகரன் துணை பொதுச் செயலாளர். தேர்தல் ஆணையத்திற்கு பொதுச் செயலாளரை மாற்றவோ, நீக்கவோ அதிகாரம் கிடையாது. இரட்டை இலை சின்னத்தை முடக்கலாம். அதேபோல் கணக்கு வழக்குகளை வேண்டுமானால் முடக்கலாம்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com