கணவர் மறைந்த போதும் மறக்காமல் வாழும் மனைவி... வியப்பில் ஆழ்த்திய பெண்மணியின் செயல்!

கணவர் மறைந்த போதும் மறக்காமல் வாழும் மனைவி... வியப்பில் ஆழ்த்திய பெண்மணியின் செயல்!
கணவர் மறைந்த போதும் மறக்காமல் வாழும் மனைவி... வியப்பில் ஆழ்த்திய பெண்மணியின் செயல்!

மனதுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வாடிக்கையே. சில நொடிகளே இருக்கும் அந்த வீடியோக்கள் ஏற்படுத்தும் தாக்கம் எப்போதும் நெட்டிசன்களை நெகிழவைக்க தவறாது.

அந்த வகையில் Pubity என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்று 50 லட்சத்தும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. அந்த வீடியோ திருமண நிகழ்வு ஒன்றில் எடுக்கப்பட்டிருக்கிறது.

View this post on Instagram

A post shared by Pubity (@pubity)

திருமணம் முடிந்து மணமக்களுடன் உறவினர்கள் பலரும் இணைந்து போட்டோ எடுக்கும் படலத்தில் ஈடுபட்டிருந்த போது அதில் வயதான பெண்மணி ஒருவரும் இருந்தார். அந்த பெண்மணி தனது கையில் தன்னுடைய மறைந்த கணவரின் போட்டோவை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

அந்த வீடியோவின் கேப்ஷனில் “யாரப்பா அது வெங்காயம் வெட்டுறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கணவர் இறந்த பிறகும் அவரது நினைவோடு வாழ்வது என்பது அந்த தம்பதியின் காதல் வாழ்வு எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதையே இந்த வீடியோ சுட்டிக்காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com