2 ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம்: செங்கோட்டையன் உறுதி

2 ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம்: செங்கோட்டையன் உறுதி
2 ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம்: செங்கோட்டையன் உறுதி

இரண்டு ஆண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடதிட்டங்கள் கொண்டு வரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில், பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறையை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடங்‌கி வைத்தனர். பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முறைகேடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வுக்கா‌ன கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தார். பகுதி நேர ஆசிரியர்கள் இடமாறுதல்களுக்கான கலந்தாய்வும் இந்தாண்டு நடத்தப்படும் என உறுதி அளித்தார். மேலும் 2 ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com