திமுக தொண்டர்களுக்கு துரைமுருகன் அறிவுறுத்தல்

திமுக தொண்டர்களுக்கு துரைமுருகன் அறிவுறுத்தல்
திமுக தொண்டர்களுக்கு துரைமுருகன் அறிவுறுத்தல்

திமுகவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வரும் நிலையில், அதை சீர்குலைக்கும் வகையில் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது என அக்கட்சியின் பொருளாளரான துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

திமுகவினர் சிலர் கடைகளுக்குள் புகுந்து தேவையில்லாத பிரச்னைகளில் ஈடுபட்டு வருவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இதே போல் திமுக தலைமைக்கு எதிராக மு.க.அழகிரியும் செயல்பட்டு வருவதாக மறைமுகமாக பேசப்படுகிறது.

இந்தச் சூழலில் விழுப்புரத்தில் நடந்த முப்பெரும் விழாவில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், திமுகவினர் மன பேதங்களை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும், அப்போது தான் மக்களின் ஆதரவை ஒட்டுமொத்தமாக பெற முடியும் என்றும் வலியுறுத்தி பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com