‘நண்பனே இனி இனம் பார்த்து பழகு’- வைகோவுக்கு துரைமுருகன் அறிவுரை

‘நண்பனே இனி இனம் பார்த்து பழகு’- வைகோவுக்கு துரைமுருகன் அறிவுரை
‘நண்பனே இனி இனம் பார்த்து பழகு’- வைகோவுக்கு துரைமுருகன் அறிவுரை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தாமும் கருணாநிதியால் வளர்க்கப்பட்டவர்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பகுதியில் மதிமுகவின் மாநில மாநாடு மற்றும் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், வைகோவுடனான கடந்த கால சம்பவங்களை நினைவு கூர்ந்தார். நண்பனே இனி இனம் பார்த்து பழகு, களம் பார்த்து கால் வை என வைகோவுக்கு அறிவுரை கூறிய துரைமுருகன், வைகோவும், தாமும் கருணாநிதியால் வளர்க்கப்பட்டவர்கள் என பெருமிதத்துடன் கூறினார்.

விழாவில், அரசியலில் 50 ஆண்டுகளைக் கடந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் மதிமுக சார்பில் 38 தீர்மானங்கள் வெளியிடப்பட்டன. முன்னதாக, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவ படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், நடிகர் சத்யராஜ், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உள்பட  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com