\
பிறந்தநாளுக்கு பேனர் வைக்க வேண்டாம்: கட்சியினருக்கு நாராயணசாமி அறிவுறுத்தல்

பிறந்தநாளுக்கு பேனர் வைக்க வேண்டாம்: கட்சியினருக்கு நாராயணசாமி அறிவுறுத்தல்

பிறந்தநாளுக்கு பேனர் வைக்க வேண்டாம்: கட்சியினருக்கு நாராயணசாமி அறிவுறுத்தல்
Published on

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தனது பிறந்தநாளுக்கு யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

வரும் 30-ஆம் தேதி பிறந்தநாள் காணும் நாராயணசாமி, தனக்காக கட்சியினர் பேனர்களை வைத்தால், சொந்த செலவில் அவற்றை அகற்றுவேன் என்று கூறியுள்ளார். மீறி செயல்படும் கட்சி நிர்வாகிகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் போடப்படும் என நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

நாராயணசாமியின் பிறந்தநாளையொட்டி‌ அண்ணாசாலையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, யாரும் பேனர் வைக்க வேண்டாம் என முதலமைச்சர் நாராயணசாமி தனது கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com