என் பெயரை சொல்லி அழைக்கும்போது ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என கூற வேண்டாம் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இன்று சுவாரசியமாக பேசினார். அவர் பேசும்போது, “ என் பெயரை சொல்லி அழைக்கும்போது ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று கூற வேண்டாம்” என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஜல்லிக்கட்டு பார்க்கும் நேரத்தில் ஜல்லிக்கட்டு நாயகன் எனக் கூறிக்கொண்டு காளையை அடக்கச் சொன்னால் நிலை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழக முதலமைச்சராக ஓபிஎஸ் இருந்த நேரத்தில் ஜல்லிக்கட்டிற்காக அவசர சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.