தோனியின் கருத்து அபத்தம்; கேதர் ஜாதவிடம் ஸ்பார்க் இருக்கிறதா ? - ஸ்ரீகாந்த் சரமாரி கேள்வி

தோனியின் கருத்து அபத்தம்; கேதர் ஜாதவிடம் ஸ்பார்க் இருக்கிறதா ? - ஸ்ரீகாந்த் சரமாரி கேள்வி
தோனியின் கருத்து அபத்தம்; கேதர் ஜாதவிடம் ஸ்பார்க் இருக்கிறதா ? - ஸ்ரீகாந்த் சரமாரி கேள்வி

சிஎஸ்கேவின் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி தெரிவித்த கருத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் நேற்றையப் போட்டியில் கண்ட படுதோல்வியை அடுத்து , பிளே ஆஃப்-க்கான வாய்ப்பை சென்னை அணி ஏறக்குறைய இழந்துவிட்டது. இதனையடுத்து போட்டிக்கு பின்பு தோனி பேசினார். அப்போது " அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. அதனால்தான் அவர்களை களமிறக்கவில்லை. ஆனால் இனி வரும் ஆட்டங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்" என்றார்.

தோனியின் இந்தக் கருத்துக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார் ஸ்ரீகாந்த். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய அவர் "தோனி கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இப்போதும் தோனி நடைமுறைகள் குறித்து பேசிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அணியை தேர்வு செய்யும் நடைமுறையே தவறு என்றுதான் கூற வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் "இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி சொல்கிறார். ஜெகதீசன் போன்றோரிடம் இல்லாத ஸ்பார்க் கேதர் ஜாதவ், பியூஷ் சாவ்லாவிடம் இருக்கிறதா?. தோனியின் கருத்து அபத்தமானது மட்டுமல்ல ஏற்றுக்கொள்ளவே முடியாதது. நடைமுறை நடைமுறை என கூறிக்கொண்டே இறுதியாக ஐபிஎல் தொடரின் இறுதிக்கு சிஎஸ்கே வந்துவிட்டது" என்றார் ஸ்ரீகாந்த்.

மேலும் "இனி வரும் போட்டிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறுகிறார். வாய்ப்பு வழங்கப்பட்ட ஒரு போட்டியில் ஜெகதீசன் தன்னுடைய ஸ்பார்க் என்ன என்பதை காட்டிவிட்டார். சுழற்பந்துவீச்சாளர் கரன் சர்மா ரன்களை கொடுத்தாலும் விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு பதிலாக பியூஷ் சாவ்லாவை கொண்டு வந்தார்கள், ஒட்டுமொத்தமாக முடிந்துவிட்டது. தோனி சிறந்த வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர் கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார் ஸ்ரீகாந்த்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com