ஆட்சியை கலைக்க பொதுமக்களை திரட்டி போராடுவோம் : ஸ்டாலின்

ஆட்சியை கலைக்க பொதுமக்களை திரட்டி போராடுவோம் : ஸ்டாலின்

ஆட்சியை கலைக்க பொதுமக்களை திரட்டி போராடுவோம் : ஸ்டாலின்
Published on

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடவில்லை என்றால், சட்டரீதியாகவும் மக்களை திரட்டியும் ஆட்சியை கலைக்க போராடுவோம் என எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் நாளை மறுநாள் ஆளுநரை சந்திக்கவுள்ளதாகவும், தங்களுக்கு ஆளுநர் நேரம் ஒதுக்குவார் என எண்ணுவதாகவும் தெரிவித்தார். அவ்வாறு சந்திக்கும் போது தற்போது உள்ள அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடமாறு ஆளுநரை வலியுறுத்துவோம் என்று கூறினார். பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரை காத்திருப்போம் என்றும், ஒருவேளை ஆளுநர் உத்தரவிடவில்லை என்றால் சட்டரீதியாகவும், மக்களை திரட்டியும் போராட்டம் நடத்துவோம் என்றும் ஸ்டாலின் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com