சர்க்கரை விலை உயர்வு: நியாயவிலைக் கடைகள் முன் திமுக ஆர்ப்பாட்டம்

சர்க்கரை விலை உயர்வு: நியாயவிலைக் கடைகள் முன் திமுக ஆர்ப்பாட்டம்

சர்க்கரை விலை உயர்வு: நியாயவிலைக் கடைகள் முன் திமுக ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகள் முன் திமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நியாயவிலைக் கடைகளில் சர்க்கரை விலையேற்றத்தைக் கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்கள் நியாயவிலை கடைகளில் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

சென்னை திருவல்லிக்கேணியி‌ல் உள்ள அமுதம் நியாயவிலைக் கடை முன்பாக திமுக மாவட்ட செயலாளர் ஜே.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், சென்னை தெற்கு பகுதி சார்பாக சைதை தொகுதி எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம் தலைமையில் சைதாப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது. சுப்பிரமணிகோவில் தெருவில் உள்ள அமுதம் நியாயவிலை கடை முன்பு ஏராளமான திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ‌அப்போது சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com