விஷால் போட்டியிடுவதால் வாக்குகள் சிதறாது: மருதுகணேஷ்

விஷால் போட்டியிடுவதால் வாக்குகள் சிதறாது: மருதுகணேஷ்
விஷால் போட்டியிடுவதால் வாக்குகள் சிதறாது: மருதுகணேஷ்

ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடுவதால் வாக்குகள் சிதறாது என திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், நடிகர் சங்கச் செயலாளராகவும் உள்ள விஷால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் கடந்த இரு நாள்களாக ஆலோசனை நடத்தி வந்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் ஆர்.கே. நகர்த் தொகுதியில் பல முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக இன்று ஆர்.கே நகரில் புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய மருதுகணேஷ், தோழமைக் கட்சிகள் தொடர்ந்து திமுகவுக்கு ஆதாரவாக இருப்பதாக கூறினார். எனவே ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவடுதால் வாக்குகள் சிதறாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதற்கிடையே கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், திமுகவுக்கு யார் ஆதரவளித்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்றும், போட்டிடுக்கு யார் வந்தாலும் ஆர்.கே.நகரில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com