தமிழ்நாட்டுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் சட்டங்களை  தடுப்போம்: கனிமொழி 

தமிழ்நாட்டுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் சட்டங்களை  தடுப்போம்: கனிமொழி 

தமிழ்நாட்டுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் சட்டங்களை  தடுப்போம்: கனிமொழி 
Published on

'திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தைப் பற்றி எடுக்கப்படும் அனைத்து மக்களுக்கான திட்டங்களும், முடிவுகளும் தமிழ்நாட்டிலேயே எடுக்கப்படும்' என்றார் கனிமொழி. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாநில மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, ''வாக்கிற்கு பணம் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கை மக்கள் மத்தியில் கட்டாயம் எடுபடும். தமிழக மக்களுக்காக எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் தமிழகத்திலேயே எடுக்கப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தைப் பற்றி எடுக்கப்படும் அனைத்து மக்களுக்கான திட்டங்களும், முடிவுகளும் தமிழ்நாட்டிலேயே எடுக்கப்படும். மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இந்தியை பல்வேறு வழிகளில் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனை நிச்சயமாக தடுப்போம். 

தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து சட்டங்களையும், அவர்கள் திணிக்கும் அஜெண்டாக்களையும் தொடர்ந்து எதிர்ப்போம். பாஜக வேட்பாளா் ஹெச். ராஜா பெண்களுக்கு எதிராக பேசி வருபவர். காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி உள்பட பல பெண் தலைவா்களை தினந்தோறும் விமர்சனம் செய்பவர்தான் அவர்'' என்றார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com