“காவிரியிலிருந்து கூட்டுக்குடிநீர் கொண்டு வருவேன்” - செந்தில் பாலாஜி வாக்குறுதி

“காவிரியிலிருந்து கூட்டுக்குடிநீர் கொண்டு வருவேன்” - செந்தில் பாலாஜி வாக்குறுதி

“காவிரியிலிருந்து கூட்டுக்குடிநீர் கொண்டு வருவேன்” - செந்தில் பாலாஜி வாக்குறுதி
Published on

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தனது பரப்புரையை தொடங்கியுள்ளார்.

காலியாக உள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துமாறு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் வரும் மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் அரவக்குறிச்சி தொகுதிக்கு செந்தில் பாலாஜியும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு டாக்டர் சரவணனும், சூலூர் தொகுதிக்கு பொங்கலூர் நா.பழனிசாமியும், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு எம்.சி.சண்முகையாவும் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்ததுள்ள சூழலில் திமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் க‌ளம் காணும் செந்தில் பாலாஜி தனது பரப்புரையை தொடங்கியுள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் க‌ளம் காணும் செந்தில் பாலாஜி, தொகுதிக்குட்பட்ட எல்லைமேடு பகுதியில் உள்ள கோவிலில் வழிபட்டு தனது பரப்புரையை தொடங்கினார். 

அப்போது, இடைத்தேர்தல் வெற்றி மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும், குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் காவிரியில் இருந்து கூட்டுக்குடிநீர் கொண்டு வருவேன் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லுரி ஏற்படுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com