திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு: மதிமுக, விசிக நாளை பேச்சுவார்த்தை!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு: மதிமுக, விசிக நாளை பேச்சுவார்த்தை!
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு: மதிமுக, விசிக நாளை பேச்சுவார்த்தை!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தமிழக தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளன. தொகுதிகளை இறுதி செய்வது, வேட்பாளர்களை நேர்காணல் செய்வது என அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் பரபரப்பாகியுள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, கடந்த வாரமே முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது.

இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடனான தொகுதி பங்கீடு அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் எத்தனை இடங்கள் என்பது இன்றே இறுதி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com