குடகு சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆலோசனை
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில், சொகுசு விடுதியில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
சென்னையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில், சொகுசு விடுதியில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்படி, நாளைய கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அறிவித்துள்ளனர்.
யாருக்கும் முறையான அழைப்புவிடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். மூன்று பேர் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க சென்றுள்ளனர். முன்னதாக அவர்கள் அனைவரும் புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.