இன்று தீர்ப்பு: குக்கர் சின்னம் தினகரனுக்கு கிடைக்குமா ?

இன்று தீர்ப்பு: குக்கர் சின்னம் தினகரனுக்கு கிடைக்குமா ?

இன்று தீர்ப்பு: குக்கர் சின்னம் தினகரனுக்கு கிடைக்குமா ?
Published on

குக்கர் சின்னத்தையும் தனக்கு அடுத்து வரும் தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். நீதிமன்றமும் தினகரன் கோரிக்கை ஏற்று இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

அதிமுக இரு அணிகளாக செயல்பட்ட போது தாற்காலிக கட்சிப் பெயர்கள் கொடுக்கப்பட்டது. அதன்பின் அணிகள் இணைந்ததால் பன்னீர்செல்வம் தலைமையிலான ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணியே உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற அணி இருந்தது. அதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தை பெற்று, களம் கண்டு வெற்றியும் பெற்றார். 

இந்நிலையில் தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என  எதிர்பாக்கப்படுகிறது. இதனால் இரு அணிகளாக இருந்த சமயத்தில் சசிகலா அணிக்கு கொடுக்கப்பட்ட அதிமுக அம்மா என்ற பெயரையும் , குக்கர் சின்னத்தையும் தனக்கு அடுத்து வரும் தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.மனு மீதான  விசாரணையில், உள்ளாட்சி தேர்தல்களில் மாநில தேர்தல் ஆணையமே முடிவெடுக்க வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையம் வாதிட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து அந்தப் பெயரை பயன்படுத்த அனுமதிக்க தலைமை தேர்தல் ஆணையத்துக்கே அதிகாரம் உண்டு என தினகரன் தரப்பு வாதிட்டது.  இந்நிலையில் மனு மீதான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று பிறப்பிக்க உள்ளது. நீதிமன்றமும் தினகரன் கோரிக்கை ஏற்க முடியுமா என தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com