பொள்ளச்சி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட துணை சபாநாயகர் ஜெயராமன்

பொள்ளச்சி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட துணை சபாநாயகர் ஜெயராமன்
பொள்ளச்சி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட துணை சபாநாயகர் ஜெயராமன்

பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு தனியாக 30 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வெளியிட்டார்.

பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பொது மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டப்பட்டது.

பொள்ளாச்சி தலைமை தேர்தல் அலுவலகத்தில், அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் 30 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை 2021 என்ற புத்தகத்தை முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதில் பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும், புதிய அரசு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டுவரப்படும், பரம்பிக்குளம் -ஆழியாறு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும், ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும், மற்றும் பொள்ளாச்சியின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் கொங்கு பண்பாட்டு மையம் மூலம் நூலகம் துவங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் அந்த அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com