பாஜகவில் இணைந்தார் புதுவை திருநள்ளாறு தொகுதி அமமுக வேட்பாளர்

பாஜகவில் இணைந்தார் புதுவை திருநள்ளாறு தொகுதி அமமுக வேட்பாளர்
பாஜகவில் இணைந்தார் புதுவை திருநள்ளாறு தொகுதி அமமுக வேட்பாளர்

புதுச்சேரி திருநள்ளாறு தொகுதி அமமுக வேட்பாளர் பாஜகவில் இணைந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். அதனால், பரப்புரையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தொகுதியின் அமமுக வேட்பாளர் தர்பாரண்யேஸ்வரன் பாஜகவில் இணைந்தார். மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், அர்ஜுன்ராம் மேக்வால் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். அதேபோல் திமுகவிலிருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி சம்பத், சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

இதுகுறித்து பேசிய சிடி ரவி, சுய மரியாதையை விரும்புபவர்கள் பாஜகவிற்கு வாருங்கள் என தமிழக மேலிட பொறுப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு சாதகமான சூழல் உள்ளதால் மீண்டும் ஆட்சியமைக்கும் எனவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com