மட்டைக்கு பதிலாக மைக்கை கையில் எடுக்கும் சுரேஷ் ரெய்னா

மட்டைக்கு பதிலாக மைக்கை கையில் எடுக்கும் சுரேஷ் ரெய்னா
மட்டைக்கு பதிலாக மைக்கை கையில் எடுக்கும் சுரேஷ் ரெய்னா

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வர்ணணையாளராக உருவெடுத்துள்ளார்.

'மிஸ்டர் ஐபிஎல்' என ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை இந்த முறை எந்த அணியும் ஐபிஎஸ் போட்டியில் விளையாட ஏலம் எடுக்கவில்லை. ஐபிஎல் தொடங்கியதில் இருந்து அனைத்து சீசன்களிலும் பங்கேற்று வந்த ரெய்னா, முதல்முறையாக தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்திருந்த ரசிகர்களுக்கு, தற்போது உற்சாக செய்தி வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில். வர்ணனையாளராக, சுரேஷ் ரெய்னா களமிறங்கவுள்ளதாக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போல இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் வர்ணனையாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com