மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை; குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் அருவி

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை; குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் அருவி

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை; குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் அருவி
Published on
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
 
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயில் காணப்பட்டது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மழையும் பெய்தது.
 
மேற்குத் தொடர்ச்சி மலை நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.  ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
 
குற்றாலத்தில் தொடர்ந்து தடை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் யாரும் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவிப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com