“பொய்கள் நிறைந்தது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை” - மோடி விமர்சனம்

“பொய்கள் நிறைந்தது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை” - மோடி விமர்சனம்

“பொய்கள் நிறைந்தது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை” - மோடி விமர்சனம்
Published on

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அக்கட்சித் தலைவர்களை போலவே பொய்கள் நிறைந்தவை என மோடி தெரிவித்துள்ளார்

அருணாச்சல பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ஊழலுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளதுடன் மிகைப்படுத்தப்பட்ட உறுதிமொழிகளின் தொகுப்பாகவும் இருப்பதாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை போல தாங்கள் விவசாயிகளை முட்டாளாக்கி ஓட்டு கேட்கவில்லை என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார். 

வரும் மக்களவைத் தேர்தல் நம்பிக்கைக்கும் ஊழலுக்கும் நடக்கும் மோதல் என்றும் வளர்ச்சிக்கும் சதிக்கும் இடையிலான மோதல் என்றும் மோடி தெரிவித்தார். 2009ம் ஆண்டிற்குள் எல்லா வீடுகளுக்கும் மின் இணைப்பு தந்துவிடுவோம் என காங்கிரஸ் 2004ம் ஆண்டு வாக்குறுதி அளித்ததாகவும் ஆனால் 2014ல் தாம் ஆட்சிக்கு வரும் போது 18 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் இல்லாத நிலை இருந்ததாகவும் மோடி விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com