கொரோனா கால மகத்துவர்: ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆசிரியர்கள்

கொரோனா கால மகத்துவர்: ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆசிரியர்கள்
கொரோனா கால மகத்துவர்: ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆசிரியர்கள்

மதுரை அருகே கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த தங்கள் பள்ளி குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் சொந்த செலவில் 50 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கி உள்ளனர்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அடுத்த புதுதாமரைப்பட்டியில் உள்ள சிஎஸ்ஐ துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. அதனுடன் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சுமார் 50 ஆயிரம் செலவில் 5 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை மாணவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கி உள்ளனர்.

தங்களது பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வியை மட்டும் கற்றுத் தருவதோடு நின்றுவிடாமல் அவர்களின் சூழ்நிலை அறிந்து உதவிக்கரம் நீட்டிய ஆசிரியர்களுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com