கடலூர்: பேருந்தில் பயணம் செய்த நபருக்கு கொரோனா- அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்

கடலூர்: பேருந்தில் பயணம் செய்த நபருக்கு கொரோனா- அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்
கடலூர்: பேருந்தில் பயணம் செய்த நபருக்கு கொரோனா- அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்

 (கோப்பு புகைப்படம்)

கடலூர் மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் சக பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பண்ருட்டியிலிருந்து வடலூர் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து கொஞ்சிகுப்பம் என்ற இடத்தின் அருகே சென்றபோது 54 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இருந்து போனில் அழைப்பு வந்தது. அவர் பேருந்தில் பயணம் செய்வதாக தெரிந்துகொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், அவரது கைபேசியை நடத்துனரிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். அப்போது நடத்துனரிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகிருப்பதால் அவரை அந்த இடத்திலேயே இறக்கி விடுமாறு கூறியதாகத் தெரிகிறது. 

இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பேருந்து நடத்துனர் இறங்கச் சொன்னபோது தகவலை கேள்விப்பட்டு, அனைத்து பயணிகளும் அலறியடித்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கி ஓடினர். பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பேருந்து நின்று கொண்டிருந்த இடத்திற்கு சென்று கொரோனா உறுதியான நபரையும் அவரது மனைவியையும் தொற்று சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

பின்னர் அந்த அரசுப் பேருந்து வடலூர் பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com