டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதி! - தனிமைபடுத்தப்பட்ட முழு அணி!

டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதி! - தனிமைபடுத்தப்பட்ட முழு அணி!
டெல்லி அணி வீரருக்கு கொரோனா உறுதி! - தனிமைபடுத்தப்பட்ட முழு அணி!

டெல்லி கேப்பிடஸ் அணியின் பிசியோ பேட்ரிக்கிற்கு பிறகு, அணியின் வீரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல்லில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 அன்று அந்த அணியின் பிசியோ பயிற்சியாளர் பேட்ரிக் ஃபார்ஹார்ட்-க்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே அணியாக டெல்லி இருக்கிறது. இந்நிலையில் ஏப்ரல் 20 செவ்வாய்க்கிழமை அன்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான திட்டமிடப்பட்ட ஆட்டத்திற்காக புனேவுக்குச் செல்லும் திட்டத்தை ரத்து செய்யும்படி டெல்லி அணிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரேபிட் ஆன்டிஜென் சோதனையில், டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று முடிவு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்த டெல்லி முழு அணியும் மும்பையில் தனிமைப்படுத்தலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஐபிஎல் நிர்வாகம், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆர்டி-பிசிஆர் சோதனை மூலம் கொரோனா தொற்றை உறுதிப்படுத்தும். ஆகவே டெல்லி அணியில் உள்ள அனைத்து நபர்களுக்கும் இன்றும் நாளையும் கொரோனா ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் சோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு புனே செல்ல வேண்டாம் என்று டெல்லி அணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டைப் போல இந்த ஆண்டும் சீசன் ஒத்திவைக்கப்படுமா எனும் அச்சம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com