குற்றாலத்தில் விடிய விடிய மழை; அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு!

குற்றாலத்தில் விடிய விடிய மழை; அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு!

குற்றாலத்தில் விடிய விடிய மழை; அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு!
Published on

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று காலை முதலே அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வந்தது.

மேற்குத்தொடர்ச்சி மலையின் உட்பகுதியில் விடாது பெய்த மழையினால் நேற்று மதியத்திற்கு மேல் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி வருகிறது.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக விழுந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தென்மேற்குப் பருவமழை சரிவர பெய்யாத நிலையில், இரண்டு நாட்களில் கொட்டித்தீர்த்த மழையினால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com